தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்ட பத்திரிக்கை அறிக்கை
22.07.2013
அன்று ராமநாதபுரம் கேணிக்கரை அருகிலுள்ள செய்யதம்மாள் பள்ளி உள்வளாகத்தில்
உள்ள முஸ்லிம்களின் புனித இடமான பள்ளிவாசலில் சில கயவர்களால் மலம் ஜலம்
கழிக்கப்பட்டும் அங்குள்ள இஸ்லாமிய புத்தகங்களை தீயிலிட்டு எரித்தும் இந்த
வெறிச்செயலை செய்துள்ளார்கள்.இந்த மானகெட்ட வெறியர்களை தேசிய பாதுகாப்பு
சட்டத்தில் கைது செய்து தண்டனை அளிக்கவேண்டும் இதனை செய்ய தமிழக அரசு
தவறினால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் அறைகூவல் விட்டு அழைத்து
ராமநாதபுரத்தில் வரலாறு காணாத மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை இன்ஷா அல்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்பதை தமிழக அரசுக்கு எச்சரிக்கை
செய்கிறோம்.



No comments:
Post a Comment