முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

டி என் டி ஜே தாவா பணிகள்

 

திருவார் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 2-6-2013 அன்று புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்புபேரணி நடைப்பெற்றது.
முஹம்மத் பருஜ்.அனஸ் நபீல் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனார். 
இதன் விளைவாக சுமார் 8 கடைகளில் ”நாங்கள் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பதில்லை” என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
அல்ஹம்துலில்லாஹ்

S.P.பட்டிணம் கிளை-துண்டு பிரசுரம்

07.06.2013 வெள்ளிக்கிழமை அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக ஜுமுஆ தொழுகைக்கு பின்னர ஜுமுஆ தினத்தில் இரண்டு பாங்கு ஏன்?என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
--> 

நரிப்பையூர் கிளை-கிருஸ்த்துவர்களிடம் தாஃவா



 12/06/2013  புதன் கிழமை நரிப்பையூரில் கிறிஸ்துவ பிரச்சாரம் செய்ய வந்த
 ராமேஸ்வரம் ஊழியர்(தூத்துக்குடி) அலெக்ஸ் , தங்கச்சிமடம் சுரேஷ்
 ,திருவாரூர் மகேஷ் இவர்களோடு வந்த குழுவினரிடம் நரிப்பையூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளை
 நிர்வாகிகள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் நரிப்பையூர் சுலைமான் அனைவரும் சென்று பைபிள் குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்று சொன்னதற்கு  இன்னொரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிற தேதியை அறிவிக்கிறோம்  என்று சொல்லி நழுவினர்கள் .அவர்களிடம் இஸ்லாம் குறித்து விளக்கி தாவா
 செய்யப்பட்டு குர்ஆன் வழங்கப்பட்டது . விளக்கம் சொல்ல வரும் நாளை
 எதிர்நோக்கி காத்திருக்கும் நரிப்பையூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளை ............ விளக்கம்> சொல்ல வருவார்களா ??????????/?பொறுத்திருந்து பார்ப்போம்.

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாஃவா


12.06.2013 புதன் கிழமை அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக  சித்திக் என்ற சகோதரருக்கு  நபிவழி தொழுகையை விளக்கி தொழுகை புத்தகம் கொடுத்து தொழுகைக்கு அழைப்பு கொடுத்து தனிநபர் தாவா செய்யப்பட்டது
-->
 
 


No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்