முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

SP.பட்டிணம் கிளை-இணைவைப்புக்கு எதிராக தாஃவா

07.06.2013 வெள்ளிக்கிழமை அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக நாகூர் என்ற சகோதரருக்கு இஸ்லத்தில் இணைவைத்தல் தலைப்பில் அவருக்கு தாஃவா செய்யப்பட்டு  அவர் கழுத்தில் இருந்த தாயத்து கயற்றை அறுத்து எறியப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

 

கீழக்கரை கிழக்கு-ஹதீஸ் விளக்கவுரை

11.06.2013 செவ்வாய்க்கிழமை அன்று கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் ஹதீஸ் விளக்கவுரை நடைபெற்றது.இதில் ஜிப்ரயீல் அவர்கள் விளக்கமளித்தார்கள்.

திருப்பாலைக்குடி கிளை-சுவரொட்டி

10.06.2013 திங்கள்கிழமை திருப்பாலைக்குடி பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம்  திருப்பாலைக்குடி தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்று லாரி மூலம் குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி சொல்லி வால்போஸ்டெர் ஒட்டப்பட்டது. 

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாஃவா

   
11.06.2013 செவ்வாய்க்கிழமை  அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.
 அதில் கட்டடக் கலை பொறியாளர் A .மோகன் ராஜ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும்,மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும், சீடியும் கொடுத்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.

SP.பட்டிணம் கிளை-அவசர இரத்த தான விளம்பரம்

07.06.2013 வெள்ளிக்கிழமை அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக அவசர இரத்ததானம் வாசகம் அடங்கிய விளம்பரங்கள் பஸ்நிலையம் அருகில் வைக்கப்பட்டது.

SP.பட்டிணம் கிளை-இலவச கிணறு அமைத்துக்கொடுத்தல்

07.06.2013  வெள்ளிக்கிழமை அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பயன்பெறும் வகையில் அவர்களுக்கு கிணறு அமைக்கப்பட்டது.இதன் மூலம் அவர்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பனைக்குளம் கிளை-பெண்கள் பயான்

09.06.2013 ஞாயிற்றுக்கிழமை அசருக்கு பின்னர் பனைக்குளம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் உரையாக அஸ்மிதா ஆலிமா மற்றும் ஆயிஷா ஆலிமா உரையாற்றினார்கள.
-->

வெளிப்பட்டிணம் கிளை-பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 09.06.2013  அன்று மாலை 5:00 மணியளவில் கொல்லம்பட்டறைக்கார தெருவில் பெண்களுக்கான பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட தாயீ சகோ.ஹமீதா ரைஹானா அவர்கள் மறுமையில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பல சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
-->

வெளிப்பட்டிணம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 09.06.2013  அன்று இரவு 7:00 மணியளவில் பாசிப்பட்டரை தெரு அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தாயீ சகோ.செய்யது அவர்கள் மிஹ்ராஜ் தரும் படிப்பினையும், மார்க்கத்தில் புகுந்த அனாச்சாரமும்.. என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
-->

ராமேஸ்வரம் கிளை -தனிநபர் தாஃவா


10.06.2013 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின்சார்பாக  பாலமுருகன் என்றசகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம்புத்தகமும், சீடியும் கொடுத்துதனிநபர் தாவா செய்யப்பட்டது.
-->

Sunday, 9 June 2013

நம்புதாளை கிளை-ஜனாஸா ஃப்ரீஸர் இலவசம்

04.06.2013 அன்று நம்புதாளை கிளை சார்பாக ஜனாஸா குளிர்சாதன பெட்டி கேட்பவருக்கு இலவசமாக எடுத்துச் செல்வதற்க்காக விளம்பரம் செய்யபட்டு இலவசமாக குளிர்சாதன பெட்டி வழங்கிவருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.
-->

நம்புதாளை கிளை-தெருமுனை பிரச்சாரம்

03.06.2013 திங்கள்கிழமை அசருக்கு பின்னர் நம்புதாளை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் யாசிர் இம்தாதி அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் ஆண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள்.
-->

 

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்