
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 26-5-2013 ஞாயிற்றுகிழமை அன்று நமது கிளை முன்னாள் தலைவர் மற்றும் மாவட்ட தாயி சகோ அப்துல் ரஹ்மான் அவர்களிற்கு கிழக்கரையில் வைத்து எளிமையான நபி வழி திருமணம் நடைப்பெற்றது.
இதில் மெளலவி சகோ மக்தும் அவர்கள் நபி (ஸல்) கற்றுதந்ததுபோல் சிறிது நேரம் “இஸ்லாமிய திருமணம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 30 : 21
நபி (ஸல்) அவர்களும் இதே கருத்தைக் குறிப்பிடுகின்றார்கள். "எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான். நான் விநியோகிப்பவன்தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை முஆவியா (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
நூல்: புகாரி 71
தகவல்
தமிம் மரைக்காயர் பட்டினம்
இராமநாதபுரம் மாவட்டம்
No comments:
Post a Comment